Wednesday, November 21, 2012

GURU POOJA

சன்மார்க்க அன்பர்களுக்கு அருள்பெறும் வணக்கங்கள்: 

நேற்று (20.11.2012 - செவ்வாய் கிழமை) கடலூர் மாவட்டம் காரணப்பட்டு கிராமத்தில் திருவருள் சம்மதத்தால், வள்ளலாரின் அணுக்கத் தொண்டர்  அருள்திரு. ச.மு.கந்தசாமி பிள்ளை அவர்களின் 86-வது குருபூஜை இனிதே நடைபெற்றது. 


அவ்வமையம் சிறப்பு பேச்சாளராக திரு.அருட்பா அருணாசலம் கலதுக்கொன்டு வள்ளலாரின் சன்மார்க்க கருத்துகளையும், வள்ளலாரின் பொற்பாத குறட்டின் (வள்ளலாரின் பொற் பாதுகை இங்கே உள்ளது) மகிமைகளையும்  மற்றும் ச.மு.கந்தசாமி பிள்ளை அவர்களின் சிறப்புகளையும் எடுத்து இயம்பினார்.



 மேலும் சில அன்பர்கள் சொற்பொழிவு நிகழ்தியப் பிறகு அனைவர்களுக்கும்  அன்னதானம்,காரணப்பட்டு கிராம மக்களால் மிகவும்  சிறப்பாக அளிக்கப்பட்டது.




இவ்வருட குருபூஜையில் எமக்கு தெரிந்து, சென்னையில் இருந்து வந்திருந்த திரு.வினோத் அவர்களும் மேட்டுக்குப்பத்தில் இருந்து வந்து ஆன்மலாபம் பெற்ற சில அன்பர்களையும் இங்கே குறிப்பிடவிரும்புகிறேன்.






மேலும்  இப்பூஜையில் கலந்துக் கொண்டவர்களின் சில புகைப் படங்களையும்  காண்போம்...




இறுதியாக இக்குருபூஜையின் ஒருங்கிணைப்பாளரான திரு.பழனி அவர்களுக்கு, திரு. அருட்பா அருணாசலம் அவர்கள் பொன்னாடை சாற்றி சிறப்பித்தார்கள்


மற்றும் இப்பூஜையில் அருள்திரு. ச.மு.கந்தசாமி பிள்ளை அவர்களின் வழி தோன்றல்களான திருமதி கவ்சல்யா நடராஜன் (காரணப்பட்டு), திரு.அ.திருநாவுக்கரசு மல்லிகா (மேலழிஞசிப்பட்டு), திரு.அ.மணிவண்ணன் விஜயா (ஊரப்பாக்கம் - சென்னை ), திரு.அ.முருகாநிதி சரஸ்வதி (காரைக்காடு) ஆகியோர்கள் கலந்துகொண்டு ஆன்ம இலாபம் அடைந்தனர்

தி.ம.இராமலிங்கம்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.